சின்னத்திரை நடிகையின் தற்கொலைக்கு என்ன காரணம் தெரியுமா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


கடந்த வருடம் சின்னத்திரை நடிகை சபர்ணா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் அவருடன் நெருங்கி பழகி வந்த நடிகை உஷா எலிசபெத் ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது,


நானும் சபர்ணாவும் நெருங்கி பழகி வந்தோம். ஒரு வருடமாக எந்த வாய்ப்பும் வரவில்லை என என்னிடம் அவள் கூறி வந்தாள். இதனை கூறி அவள் எப்போதும் புலம்பி கொண்டே இருப்பாள்.

அதற்கு நான் எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறி வந்தேன். ஆனால் அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நினைக்கவில்லை. அவளின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பதை விட வாய்ப்பு இல்லாதது தான் காரணம் என்று கூறி உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!