அந்த விஷயத்துக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்..!! தெறித்து ஓடிய பிரபல நடிகை..!!


பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.

‘மகாநதி’ என்கிற பெயரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சாவித்திரி கதாபத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

துல்கர் சல்மான், சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்த படத்தை இயக்குனர் நாக்.அஸ்வின் இயக்கி வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்., அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.


இந்த பாகத்தில் நடிகை சாவித்திரி சற்று உடல் பருமனாக உள்ள கதை தயாராகவுள்ளது.

இதற்காக., நடிகை கீர்த்தி சுரேஸிடம் இன்னும் குண்டாகுமாறு இயக்குனர் கூறியுள்ளார். ஆனால், கீர்த்தி சுரேஷ் அதற்கு மறுத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

முன்னதாக, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஸ்கா குண்டு பெண்ணாக நடிக்க உடல் எடையை அதிகரித்தார்.

ஆனால், அதன் பின்னர் அவரது அந்த குண்டு உடம்பினை அவரால் குறைக்கவே முடியவில்லை.


இதன் காரணமாக ஏற்பட்ட பயத்தினால் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை அதிகரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதனால், பாகுபலி படத்தில் அனுஸ்காவிற்கு கிராபிக்ஸ் மூலம் உடம்பினை குறைத்து காட்டியது போல், மகாநதி படத்தில் கீர்த்திக்கு உடம்பினை குண்டாக காட்ட இயக்குனர் முடிவெடுத்துள்ளார்.

இந்த திரைப்படம் 2018 மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!