மிக மோசமான நிலையில் எஸ்.பி.பி, முக்கிய இடத்தில் இரத்தக்கசிவாம்…அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.

அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

அதை தொடர்ந்து அவர் பூரண குணமாக தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதோடு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல குடும்பத்தினர் எஸ்.பி.பிகாக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வந்த அறிக்கையில் அவருடைய உடல் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

அதோடு நுரையீரல் பகுதியில் அவருக்கு இரத்தகசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!