அசாம் வெள்ள நிவாரண நிதி…. கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய் குமார்

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கி உதவியுள்ளார்.

அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அம்மாநிலத்தில், 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின கடும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தால் 80 போ் பலியாகியுள்ளனர், சுமார் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து அம்மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் தனது சமூக வலைதள பதிவில், அசாம் வெள்ள நிவாரணத்திற்கு, ரூ. 1 கோடி வழங்கிய நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் எப்போதும் உங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள். அசாமின் உண்மை நண்பனான உங்களுக்கு கடவுள் அருளால் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!