அவருடன் நடிப்பதுதான் மிகப்பெரிய கனவு – துஷாரா விஜயன்

சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை துஷாரா விஜயன் பிரபல நடிகருடன் நடிக்க ஆசை என்று கூறி இருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இவர் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துஷாரா விஜயன் “எனக்கு தனுஷுடன் நடிப்பது தான் மிகப்பெரிய கனவு” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!