கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற இறைவனிடம் வேண்டுவதாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்க தேன் சாப்பிடுவீங்களானு கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீங்கன்னு கேட்டார்.
இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன். அதற்கு அவர் ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்கனு சொன்னார். அவர் உடல்நலம் சரியில்லாம இருப்பதை பார்த்து இந்தியாவே கவலைப்படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்லபடியாக குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும் என சரோஜா தேவி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!