சுதந்திரம் குறித்து ஓவியாவின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’சுதந்திரம்’ குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!