வனத்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவை போலவே மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இதனால் பிற மொழி படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் படத்தில் நடித்தார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்தார்.

தற்போது தெலுங்கு திரையுலகில் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து இந்தி படத்தில் அமீர்கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!