குறும்படத்தில் நடித்தது ஏன்? – சாய் தன்ஷிகா விளக்கம்

தமிழில் பரதேசி, பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்த சாய் தன்ஷிகா தற்போது குறும்படத்தில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பரதேசி, பேராண்மை, கபாலி படங்கள் மூலம் நிரூபித்தவர் சாய் தன்ஷிகா. ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் குறும்படம் சினம்.

பெரிய படங்களில் பிசியாக இருக்கும் போதே குறும்படத்தில் நடித்தது ஏன் என்று கேட்டதற்கு சாய் தன்ஷிகா கூறியதாவது, ‘தன் மகள், வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள் என்றவுடன், அந்த தந்தை செய்யும் கொடூரமும், அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம். மொத்தம், 20 நிமிடம் கொண்ட படத்தில், தொடர்ந்து, 16 நிமிடங்கள் நான் பேசுகிறேன். உலக அளவில், இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!