முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி? காரணம் என்ன..

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என் மற்ற மொழிகளிலும் தனது நடிப்பின் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா.

இயக்குனர் சுகுமார் இயக்கும் இப்படத்தை செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாக வரும் மாபெரும் படமாக பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் இளம் நைகை ராஷ்மிகா மந்தன்னா.

மேலும் புஷ்பா படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக பல தரப்பில் இருந்து கூறப்பட்ட வந்தது.

ஆனால் தற்போது மற்ற படங்களில் நடித்து வருவதனால் கால்சீட் இல்லாத காரணத்தினால், இப்படத்தில் இருந்து திடீரென விஜய் சேதுபதி விலகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!