‘மெட்டி ஒலி’ புகழ் நடிகர் மாரடைப்பால் காலமானார்..!! ஆழ்ந்த சோகத்தில் பிரபலங்கள்..!!


பழனி இடும்பன்மலை பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 43). பிரபல நடிகரான இவர் கோலங்கள், மெட்டிஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். மேலும் எம்டன் மகன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக விஜயராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார். இன்று வீட்டில் இருந்த விஜயராஜூக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவர் மயங்கினார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு விஜயராஜ் இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!