வீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது மகன் துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் ‘ஃபேமிலி’ எனும் குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மம்முட்டி உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் .

ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட வி‌ஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.

இக்குறும்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குறும்படம் குறித்த ருசீகர தகவல் வெளியாகி உள்ளது. இக்குறும்படத்தில் மம்முட்டி நடித்த காட்சிகளை அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தான் படமாக்கினாராம். நடிப்பை தவிர தனக்கு படம் இயக்குவதிலும் ஆர்வம் இருப்பதாக துல்கர் சல்மானை நிறைய பேட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!