தமிழ் சினிமாவில் அனைவராலும் தளபதி என அழைக்க படுபவர் நடிகர் விஜய்.
இவரின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும்.
சென்ற வருடம் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம், 300 கோடிக்கும் வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடித்துள்ளார், அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த அவர் “என்னை வியக்க வைக்கும் நட்சத்திரம், அவர் ஒரு சூப்பர் ஸ்டார்” என கூறியுள்ளார்.
மேலும், நடிகை நிதி அகர்வால் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!