நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ‘சைரன்’, ‘ஜெ.ஆர்.30’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!