நடிகை மஞ்சிமா மோகன், ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து அவர் ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் இவர் நடித்த மூன்று படங்களுமே தோல்வியடைந்தன. இந்த படத் தோல்விக்காக அவர் தனி அறையில் கதறி அழுத சம்பவத்தை கூறினார் மஞ்சிமா மோகன்.
அவர் கூறுகையில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் என்னை இயக்குனர் கவுதம் மேனன் அறிமுகப்படுத்தினார்.
அறிமுகம் என்பதால் உள்ளுக்குள் எனக்கு ஒரு பயம் இருந்தது. அப்போது அவர் தந்த ஊக்கம் எனக்கு நடிப்பை நன்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை தந்தது.
இதையடுத்து ‘சத்ரியன்’ படத்தில் நடித்தேன். மிகவும் ஆர்வமாக முதல்காட்சியை தியேட்டரில் சென்று பார்த்தேன். ஏதோ ஒரு குறை இருப்பதை என்னால் உணர முடிந்தது. படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது என்று தெரிந்ததும் வீட்டில் தனி அறைக்கு சென்று கதறி அழுதேன்.
நடிகை திரிஷாவுக்குபோன் செய்து இதுபற்றி பேசினேன். அவர் கூறிய ஆறுதல் வார்த்தைகள் என்னை கவலையில் இருந்து தேற்றியது. அடுத்து வெளியான படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ படத்தில் நடித்து வருகிறேன். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக்காக இது உருவாகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!