பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார். இந்த சீசனில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள்.

நடிகை சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கி உள்ளார். சிவானியின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!