விஜய் பழி வாங்கப்படுவது இதனால் தானா? பகிரங்கமாக பேசிய முக்கிய நபர்!

இளையதளபதி விஜய்யின் சென்னை அலுவலகம், வீடுகளில் நேற்று முதல் தொடர்ந்து வருமான வரித்துறையினரால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இரண்டாம் நாளாக இந்த சோதனை நீடித்து வருகிறது. பிகில் பட விசயத்தில் வரி ஏய்ப்பு செய்தது உண்மையானால் விஜய் கைதாகும் வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேரளாவில் விஜய்க்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இதில் இந்த சோதனை ஜனநாகயத்திற்கு விடப்பட்ட சவால் என்று கூறியுள்ளது.

மேலும் மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அன்வர், விஜய்யின் மெர்சல் பட திராவிட மண்ணில், பாஜக வளர்ச்சிக்கு தடையாக அமைந்ததாகவும், அதனால் தான் விஜய் பழிவாங்கப்படுகிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!