ரியல் ஹீரோ தங்கச்சியை காயப்படுத்தி, ஏமாத்த மாட்டான்: அருண் விஜய்யை விளாசிய வனிதா

ஒரு உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி, ஏமாற்ற மாட்டார் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதாவின் ஆசை
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். குறிப்பாக தன் மகன் ஹரியுடன் இருக்க விரும்புகிறார். இதை அவர் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் ஆசை எதுவும் இதுவரை நிறைவேறவில்லை. இந்நிலையில் அவர் அண்ணன் அருண் விஜய் குறித்து ட்வீட் செய்துள்ளார். முன்னதாக அருண் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் தற்போது விமர்சித்துள்ளார்.

அருண் விஜய்
அருண் விஜய்யின் பெயரை மென்ஷன் செய்து வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உண்மையான ஹீரோ தன் சொந்த சகோதரியை காயப்படுத்தி, ஏமாற்ற மாட்டார். உன்னாலும், என் சகோதரிகளாலும் தொடர்ந்து அசிங்கப்படுத்தி, ஒதுக்கப்படுகிறேன். இதை தீர்த்து வைக்கும் அளவுக்கு நீ மெச்சூரானவர் தான். சமமாக என்னை ட்ரீட் செய்ய வேண்டுமே தவிர அவமதிக்கக் கூடாது. என்னையும், என் குழந்தைகளையும் காயப்படுத்துவதை நிறுத்துக் கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.

வனிதா ட்வீட்
உன் ரசிகர்களுக்கு நீ இன்ஸ்பிரேஷனாக இருக்கிறாய். அவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து விட வேண்டாம். நடந்தது நடந்துவிட்டது. யாருமே பெர்ஃபெக்ட் இல்லை. அனைவரும் தவறு செய்துள்ளோம். நம் குழந்தைகளை நேசிக்கும் நபர்கள் நாம். அது தான் முக்கியம் என்கிறார் வனிதா.

பொறுப்பாக நடந்து கொள்
நான் உன் மகன், உன் வீட்டை பறித்துக் கொண்டு போலீசாரை வைத்து உன்னையும், உன் குடும்பத்தையும் தொந்தரவு செய்து, உன்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக் கொண்டு தெருவில் விட்டு, நம் அப்பா மற்றும் குடும்பத்தை உனக்கு எதிராக திருப்பிவிடுகிறேன் என்று நினைத்துக் கொள். நீங்கள் எனக்கு இப்படித் தான் செய்தீர்கள். நான் அதை எல்லாம் தாண்டி என் குழந்தைகளை கொன்று, தற்கொலை செய்யாமல் தைரியமாக உள்ளேன். உங்களால் அதிருப்தி அடைந்துள்ளேன். பொறுப்பாக நடந்து, சரியானவற்றை செய்யவும் என்று வனிதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!