விஜய்னாலும், ரஜினினாலும் ஒரே பதில் தான்: இது நயன்தாரா ஸ்டைல்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டாராம்.

தர்பார் இசை வெளியீட்டு விழா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. முன்னதாக வெளியான சும்மா கிழி பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் மற்ற பாடல்களை கேட்க அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ரஜினிகாந்த் பேச்சு
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அனைவரும் எதிர்பார்க்கும் இந்த விழாவில் படத்தின் ஹீரோயினான நயன்தாரா கலந்து கொள்ளப் போவது இல்லையாம். படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நடிப்பதோடு சரி வேறு எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தான் நடிக்கிறார் நயன் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முடிவு
ரஜினி படம் என்பதால் நயன்தாரா இசை வெளியீட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாராக இருந்தாலும் முடியாது என்பது தான் நயன்தாராவின் பதிலாக உள்ளது. முன்னதாக சம்பள பாக்கி இருப்பதாகக் கூறி தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்புக்கே நயன்தாரா வரவில்லை. மேலும் தர்பார் படத்தில் நடித்து முடித்த கையோடு என் கெரியரில் நான் செய்த மிகப் பெரிய தவறு முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தது தான் என்று பழசை எல்லாம் மீண்டும் பேசியுள்ளார்.

முருகதாஸ் தேர்வு
தர்பார் படத்தில் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக நடிக்க வைக்கத் தான் விரும்பினாராம் முருகதாஸ். ஆனால் ரஜினி தான் கீர்த்தி வேண்டாம் நயன்தாராவை நடிக்க வைங்க என்று கூறியதாக செய்திகள் வெளியானது. முன்னதாக நடந்த விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு இயக்குநர் அட்லி நயன்தாராவை அழைத்தார். தம்பி அட்லிக்காக வருவார் என்று நம்பப்பட்டது. ஆனால் நயன்தாரா வரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!