ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் ’தலைவி’ படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கங்கனா ரணாவத் பிரத்யேக பயிற்சி எடுத்து தலைவி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்றது. கங்கனாவின் தோற்றம் ஜெயலலிதா போல் இல்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகை பிரியாமணி சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!