முதலில் இலங்கை, இப்போ துபாய்: வனிதாவை புரிஞ்சுக்கவே முடியலயே

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகு வனிதா விஜய்குமார் படுபிசியாகி விட்டார். தொலைக்காட்சி சீரியல், குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று சின்னத்திரையில் வருகிறார். மேலும் படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக யூடியூப் சேனல் துவங்கியுள்ளார். சேனல் துவங்கியுள்ளதாக அறிவித்த கையோடு வனிதா இலங்கைக்கு சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் செய்த பிரச்சனைகளை எல்லாம் பார்த்து அவரை பலரும் திட்டித் தீர்த்தார்கள். ஆனால் பின்னர் அவரின் குணம் அறிந்த பிறகு பார்வையாளர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர். பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் வனிதாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அவர் இலங்கைக்கு சென்ற இடத்தில் தெரிந்து கொண்டார். சென்ற இடத்தில் எல்லாம் ரசிகர்கள், ரசிகைகள் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வனிதாவுக்கு அமோக வரவேற்பு
இலங்கையில் வனிதாவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவர்கள் அக்காவுக்கு இம்புட்டு மவுசா, சொல்லவே இல்லை என்று வியந்துள்ளனர். இலங்கைக்கு சென்றபோது ஆயுபொவன் என்று ட்வீட் செய்த வனிதா தற்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று ட்வீட் செய்துள்ளார். காரணம் அவர் துபாய்க்கு சென்றுள்ளார். உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மாலான துபாய் மாலுக்கு வந்திருக்கிறேன் என்று கூறி அங்கு எடுத்த புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது உலகின் 5வது பெரிய மால் தான் என கூறியுள்ளனர்.

அக்கா, என்ன நடக்குது?
வனிதா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அக்கா என்ன ஒவ்வொரு நாடாக பறந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் திட்டமே புரியவில்லையே. உங்களின் யூடியூப் சேனல் பயணம் தொடர்புடையதா?. அதனால் தான் தொடர்ந்து பயணம் செய்கிறீர்களா?. என்ன தான் அந்த சேனல் என்று கொஞ்சம் சீக்கிரமாக சொல்லுங்களே. இல்லை என்றால் தலையே வெடிச்சிடும். நீங்கள் போடும் ட்வீட்டுகளால் ஆவல் அதிகரித்துக் கொண்டே போகிறது வனிதா அக்கா என்று தெரிவித்துள்ளனர்.

கவின் ஆதரவாளர்கள் பிக் பாஸ் பிரபலங்கள் யார் ட்வீட் செய்தாலும் கவிலியா பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்க, கவின் குறித்து அப்டேட் சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வனிதா போட்ட ட்வீட்டுகளை பார்த்த கவின் ஆதரவாளர்கள் சிலர் அப்டேட் கேட்டுள்ளனர். அதை பார்த்த மேலும் சில கவின் ஆதரவாளர்களோ, வேண்டாம் ப்ரோ, இப்படி அனைவரிடமும் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம். இது கவினுக்கு பிரச்சனையாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!