அவர்கள் அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன் – ஆனந்தி

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்தி, அவர்கள் அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர், தயாரிப்பாளர், பா.இரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.

ஆனந்தி பேசும்போது, ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன்ஸ் என் சொந்த கம்பெனி மாதிரி. இவர்கள் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கண்டெண்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் நல்ல இயக்குனர், அதைவிட மிகச்சிறந்த மனிதர்.

இந்தப்படத்திற்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட். டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் வெளியாகப்போகுது. நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றியடையும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!