கொஞ்சம் கோபம் இருந்தால் தான் நியாயம் கிடைக்கும்: குமாரவேலன்!

கொஞ்சம் கோபம் இருந்தால் தான் நியாயம் கூட கிடைக்கும் என்று சினம் படத்தின் இயக்குநர் குமாரவேலன் கூறியுள்ளார்.

இயக்குநர் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு சினம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது, அருண் விஜய்யின் 30 ஆவது படம். இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் இணைந்து பாலக்லால்வானி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் குமாரவேலன் கூறுகையில், எப்போதும் நான் சொல்லுவது என்னவென்றால், கோபப்படுவது நல்லதல்ல. அளவுக்கு அதிகமாக கோபப்படுவது ஒருவரை வாழ்க்கையில் கீழே தள்ளிவிடும். ஆனால், என்னுடைய படத்தில் சில நேரங்களில் கோபப்படுவது ஒரு நல்ல விஷயம் என்று நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கோபம் இருந்தா நமக்கு நியாயம் கூட கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னையில், வரும் 8 ஆம் தேதி முதல் இப்படம் தொடங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அருண் விஜய் நடிப்பில் வந்த தடம் மற்றும் சாஹோ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே மாஸான வரவேற்பு கிடைத்தது. சாஹோ படத்தில் வில்லனாகவும், தடம் படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்திருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!