ஓவியாவை போல இவர் ஒரு ரவுண்ட் வருவார் – பாத்திமா பாபு சொல்றது பலிக்குமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு உள்ளே சென்றார்.

உள்ளே சென்றது போலவே அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். நீண்ட நாட்கள் அந்த வீட்டில் அவர் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போய் விட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள பாத்திமா பாபு தர்ஷன் வெற்றியாளராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.

லாஸ்லியா, சாண்டி மற்றும் தர்ஷன் ஆகியோர் இறுதி வரை இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் பதிலளித்துள்ளார்.

மேலும் லாஸ்லியா ஓவியாவை போல ஒரு ரவுண்ட் வருவார் எனவும் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.