அவருடன் நடனம் ஆடுவது ரொம்ப கஷ்டம் – சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடன் நடனம் ஆடுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.

நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் சமந்தா தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். ஆனால் காதல் கதைகளில் நடிப்பதை தவிர்த்துவிட்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்கிறார்.

சமந்தா சமீபத்தில் பேட்டியில், தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். அதனால் தான் இப்படி காதல் கதைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் தான் நடனம் ஆடுவது மிக சிரமம் என கூறியுள்ளார்.

’அவர் சாதாரணமாக ஆகிவிடுகிறார். நான் தான் பலமுறை ரிகர்சல் செய்வேன். அவருடன் ஆடினால் என் மேக்கப், தலைமுடி களைந்து வியர்வையில் நனைந்து வருவேன்’ என சமந்தா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!