நான் 100 நாட்கள் இருந்தது அதிசயம்: சாண்டி!

ஒரே இடத்தில் நான் 100 நாட்கள் இருப்பது அதிசயம். அப்படியிருக்கும் போது என்னை இறுதிப் போட்டி வரை இருக்க வச்சுட்டீங்க. அதற்கு காரணம் நீங்கள்தான் பிக் பாஸ் என்று சாண்டி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போது சாண்டி நான் ஒரு இடத்தில் 100 நாட்கள் இருப்பது அதிசயம்தான் குருநாதா. இதற்கு எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் காரணம். இதுவரை நான் கெட்ட விஷயத்திற்கு அழவில்லை. உணர்ச்சிவசத்தில் அழுதிருக்கிறேன் என்றார். மேலும், இங்கிருந்து வெளியில் செல்லும் போது எப்படி போவேன் என்று தெரியவில்லை. நான் எப்படி சென்றாலும் நீங்கள், சிஷ்யா ஐ மிஸ் யூ என்று சொல்லுங்கள். கமல் ஹாசன் என்னை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் சாண்டி.

வீட்டு வேலை, டாஸ்க், தவிர வேறு எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் 100 நாட்கள் இருப்பது பெரிய விஷயம் தான். நல்ல வேலை, வேலையே செய்யாமல் சும்மா இருப்பதுதான் கஷ்டம் என்று வடிவேலு பாணியில் கூறுவதற்கு இடமில்லாமல், வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் சரிசமமாக பிரித்து, அவர்வர் வேலைகளையும், டாஸ்க்குகளையும் செய்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளித்து வந்துள்ளனர் போட்டியாளர்கள்.

அவர்களில் மிகவும் முக்கியமானவர் சாண்டி. ஏனென்றால், தனது நகைச்சுவை, டான்ஸ், பொறுமை, நட்பு ஆகியவற்றின் மூலம் தனக்கென்று ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். இதுவரை சாண்டி என்றால் யாரு என்று கேட்டு வந்த ரசிகர்களுக்கு மத்தியில், சாண்டி என்றால் பிக் பாஸ் என்று கூறும் அளவிற்கு அனைவரிடமும் பிரபலமாகிவிட்டார்.

தற்போது அனைவரிடமும் வெற்றி பெற்று, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை வந்துள்ளார். இறுதிப் போட்டியில் லோஸ்லியா, ஷெரின், முகென் ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி அவரது ஆர்மியினருக்கு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!