தலைப்பு பிரச்சனை: தெலுங்கு ஹீரோவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ பட தலைப்புக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹீரோ. கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர்

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், செப்டம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஹீரோ எனப் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் தேவரகொண்டா பட தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஆர்ட்ஸ் ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் கடந்த 2018-ம் ஆண்டிலேயே ஹீரோ படத் தலைப்பு பதிவு செய்திருப்பதாகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ், ஹீரோ தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று ஏப்ரல் மாதமே உத்தரவிட்டார். ஆனால் தொடர்ந்து அந்த தலைப்பை சிவகார்த்திகேயன் படக்குழு பயன்படுத்தி வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாகத் தோல்வி படங்களை கொடுத்த வந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான நம்ம விட்டு பிள்ளை படம் மூலம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அதை கெடுக்கும் வகையில் மீண்டும் ஹீரோ பட தலைப்பு பிரச்சனை தலை தூக்கியுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!