நயன்தாரா திருமணம்: என்ன அன்பான இயக்குநரே, இப்படி பண்ணலாமா?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமணத்தை வெளிநாட்டில் நடத்தலாமா என்ற யோசனையில் உள்ளார்களாம்.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரிக்கிறார்.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

திருமணத்தை தமிழகத்திலோ, கேரளாவிலோ நடத்த அவர்கள் விரும்பவில்லையாம். மாறாக வட இந்தியா அல்லது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள நயனும், விக்கியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

பாலிவுட் பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நயன்தாராவும் அப்படியே செய்ய விரும்புகிறார் போன்று. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்தை பற்றி யோசிப்பதே அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

விக்னேஷ் சிவன் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் என்ன போஸ்ட் செய்தாலும் அன்பான இயக்குநரே எங்கள் தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று ரசிகர்கள் கேட்பார்கள். நயன்தாரா பாவம், காதலோடு விட்டுவிடாதீர்கள், அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நெற்றிக்கண் படத்தை முடித்துவிட்டு நயன்தாரா திருமணம் செய்து கொள்வார் போன்று. திருமணத்திற்கு பிறகு படத் தயாரிப்பில் கவனம் செலுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா திருமணத்தை நேரில் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் கவலையை தரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!