இரண்டாவது மனைவியுடன் சாண்டியின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் சரவணன் – வெளியான புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சரவணன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த இவர் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த சில வாரங்களாக வெளியிலேயே தலை காட்டாமல் இருந்து வந்த சரவணன் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை வாங்குவதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சரவணன் சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்துள்ளார்.

https://www.instagram.com/p/B1MauaVFmt2/

அப்போது தன்னுடைய மகன், இரண்டாவது மனைவி மற்றும் சாண்டியின் குழந்தையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த போட்டோ தற்போது இணையத்திலும் வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.