நல்ல வார்த்தை சொன்ன சிவகார்த்திகேயன்: ‘அன்பான ரசிகர்கள்’ ஹேப்பி அண்ணாச்சி

sivaசிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ரசிகர்கள் எது முடிந்துவிட்டது என்று நினைத்தார்களோ அது முடியவில்லை

சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கப் போவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார். இந்நிலையில் கதை பிடிக்கவில்லை என்று கூறி அதை மாற்றுமாறு சிவகார்த்திகேயன் விக்கியிடம் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின.

கதை விவகாரத்தில் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. மேலும் இந்த படம் கைவிடப்பட்டுவிட்டது. அதனால் தான் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் படத்தை தயாரிக்க சென்றுவிட்டார் என்று எல்லாம் பேசப்பட்டது.

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகியதால் சிவகார்த்திகேயன் மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாகக் கூட தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் தனது புதுப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, ஹீரோ படத்தை அடுத்து ரவிகுமார், விக்னேஷ் சிவன், நெல்சன் ஆகியோரின் படங்களில் நடிக்கப் போவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் சிவா-விக்கி படம் கைவிடப்படவில்லை.

இதற்கிடையே சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்குமாறு அவரின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார். நெற்றிக்கண் பட வேலை முடிந்த பிறகு விக்கி தன் திருமண வேலையில் பிசியாகிவிடுவார்.

நயன்தாராவை திருமணம் செய்த பிறகு தான் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பார் போன்று. அதற்குள் சிவகார்த்திகேயன் ரவிகுமார் படத்தில் நடித்து முடித்து விடுவார். சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!