வேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் – ரீல் விமர்சனம்

நடிகர் உதய்ராஜ்
நடிகை அவந்திகா
இயக்குனர் முன்னுசாமி
இசை சந்தோஷ் சந்திரன்
ஓளிப்பதிவு சுனில் பிரேம்
நாயகன் உதய் ராஜ் தாய்-தந்தை இல்லாதவர், தன் நண்பர்களோடு வாழ்ந்து வருகிறார். அப்பகுதி காவல் ஆய்வாளர் உதவியுடன் இவர் நண்பருடன் சேர்ந்து சிறு சிறு திருடி வாழ்ந்து வருகிறார். நாயகனின் கனவில் ஒரு பெண் வந்து வந்து போகிறாள். இந்தப் பெண் யார் என்று நாயகன் தேடி வருகிறார்.

இம்மாதிரியான சூழ்நிலையில் நாயகி அவந்திகா கிராமத்தில் வசித்து வருகிறார். தந்தை இறந்ததால் இவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. கடன்காரர்கள் தொல்லை அதிகரித்ததால் நாயகி வெளியூரில் வேலைக்கு செல்கிறார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறார். நாயகியை, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி அடைய நினைக்கிறார். இதனால் மனமுடைந்த நாயகி தற்கொலைக்கு முயல்கிறார்.

குடும்ப சூழல் காரணமாக இந்த முயற்சியை கைவிட்டு, பணக்கார முதலாளிகளுக்கு தன்னை விருந்தாக்கி பணம் சம்பாதித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நாயகியை கண்ட நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்கிறார். நாயகி தனது நிலையை நாயகனுக்கு எடுத்துரைக்கிறார். இதை கேட்ட நாயகன் நாயகியை ஏற்றுக்கொண்டாரா? இருவரும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் உதய் ராஜ் புதுமுகம் என்றாலும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். நாயகி ஒரு முக்கியமான கதாபாத்திரம், அதை உணர்ந்து ஒரு திறம்பட நடித்திருக்கிறார். நாயகனுக்கு நண்பனாக வரும் சரத், காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். சந்தோஷ் சந்திரனின் இசை ஓகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் சுனில் பிரேம் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இப்படத்திற்கு பிரபல எடிட்டர் சாய் சுரேஷ் மிகப்பெரிய பலம்.

குடும்ப சூழல் காரணமாக ஊரில் இருந்து நகரத்திற்கு வேலை தேடி வரும் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை, அவலங்களையும் சுட்டிக்காட்டிய இயக்குனர் முனுசாமி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் சில இடங்களில் காட்சிகள் தொய்வு இருந்தாலும், பார்க்கும்படி எடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘ரீல்’ சரியாக சுத்தவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.