சேரனை காப்பாற்றி என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.. எனக்கு நடந்தது அநியாயம், கொந்தளிக்கும் சரவணன்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுள் 16 போட்டியாளர்களின் ஒருவரான சரவணன் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து சரவணன் சில ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் எனக்கு நடந்தது அநியாயம். கொஞ்சம் பணம் சம்பாதித்து தொழில் தொடங்க தான் பிக் பாஸ் சென்றேன்.

ஆனால் என்னை இப்படி அசிங்கப்படுத்தி போட்டியாளர்களுக்கு கூட தெரியாமல் வெளியே அனுப்புவார்கள் என தெரிந்திருந்தால் பிக் பாஸ் வீட்டிற்கே சென்றிருக்க மாட்டேன்.

சேரன் மீது மீரா குற்றம் சாட்டினார் என்பதற்காக அந்த வாரமே அவர் வெளியேற்றப்பட்டு சேரனுக்கு களங்கம் வராமல் காப்பாற்றி விட்டார்கள். ஆனால் என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என கூறி வருத்தப்பட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.