மனைவி, மருமகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவாரா? பிரபல நடிகருக்கு ஸ்வேதா ரெட்டி கேள்வி

பிக்பாஸ் தமிழ் போலவே பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியும் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே பிரபல தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததாகவும், ஆனால் அந்த அழைப்பின்போது தன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் திடீரென குற்றச்சாட்டு கூறினார்.

இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்வேதா ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் அவமதிக்கப்படுவதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன் அருவருக்கத்தக்க சில கேள்விகள் கேட்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்

மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கின்றார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே நல்ல நிகழ்ச்சி என்றால் நாகார்ஜுனா தனது மனைவி அமலா மற்றும் மருமகள் சமந்தாவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவாரா? என்று ஸ்வேதாரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்

நாகார்ஜூனாவின் மனைவி அமலா விலங்குகளிடம் மிகுந்த பிரியம் உள்ளவர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் விலங்குகளை விட கேவலமாக பெண்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது அவருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய ஸ்வேதாரெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் ஒரு ஆபாச நிகழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார். ஸ்வேதாரெட்டியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.