தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கனா திரைப்படத்தின் வெற்றிக்கு பின் நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் அவரைத் தான் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இந்த தகவல் கடந்த இரண்டு தினங்களாகவே சமூகவலைத்தளங்களில் வைரலாக, இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
Hey guys I have been hearing rumours on my love story… pls let me also know who tat guy is .. very much eager to know🤪🤪🤪 pls stop spreading such fake news … if something happens I would be first person to inform u all .. very much single an happie have a great weekend
— aishwarya rajesh (@aishu_dil) May 10, 2019
அதில், ஹாய் நண்பர்களே…. எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள்.
அவர் யார் எனத் தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கிண்டலாக கூறிய அவர் மேலும், “இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்புவதை தயவு செய்து முதலில் நிறுத்துங்கள்.
எனக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் இப்போது சிங்கிளாக இருப்பதிலேயே சந்தோஷமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.