முன்னணி நடிகை சாய் பல்லவி மீது புகார் – திரையுலகமே பரபரப்பு

சாய் பல்லவி
தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஹிந்தியில் வெளிவந்த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து துணிச்சலாக பேசியிருந்தார்.

இதற்கு பலர் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பேசியிருந்தாலும், சிலர் இதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புகார் 
இந்நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவி மீது, இதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம், ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார்.

இந்த தகவல் சாய் பல்லவியின் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!