சன் டிவி சீரியல் நடிகை மீது கண்ணீர் விட்டு புகார் கொடுத்த தாய்.. துரோகம் செய்துவிட்டதாக மகள் வேதனை

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி, தென்றல் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் தான் தேவி கிருபா.

தற்போது வசந்த் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் , இவர் மீத் இவருடைய தாய் ஸ்வாதி கிரிஜா சென்னை மதுரைவாயலில் இருக்கும் காவல்நிலையம் ஒன்றில் தன்னுடைய மகள் இறந்துவிட்டதாக நினைத்து கொள்வதாகவும், தனக்கு ஒரே ஒரு மகன் தான் இருப்பதாகவும் கூறி எழுது கொடுத்துவிட்டு வந்தார்.

இதனால் இது குறித்து ஸ்வாதி கிரிஜாவிடம் கேட்ட போது, கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து அவளுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ அவளுடைய இஷ்டத்திற்கு வாழ வேண்டும் என்பதற்காக என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டாள் என்று கூறினார்.

இவர் இப்படி கூறுகிறாரே என்று கிருபாவிடம் கேட்ட போது, அதெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் என்னிடம் தேவையில்லாமல் பணத்தை வாங்கி என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை, துரோக் செய்துவிட்டார் என்று நடந்ததை கூறினார்.

நான் என்னுடைய 14 வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன், இடையில் வாய்ப்புகள் கிடைக்காமல் போன போது கூட, அம்மாவை கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டேன்.

நான் இந்தத் துறைக்கு வந்த ஆரம்பத்துல ஒரு லட்சம் ரூபாய்க்கும்மேல என்கிட்ட கடனா வாங்கினாங்க. என்ன, ஏதுன்னு கேட்காம கொடுத்தேன்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்தப் பணம் திரும்பி கொடுக்கவேயில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வந்தது. அதன் பின் நம் அம்மாதானே என்று மன்னித்துவிட்டேன். பிறகு அடிக்கடி பணம் வாங்கினார்.

ஆனால் அதற்கான காரணத்தை கூறாமல் இருந்தார். கடந்த ஆண்டு, ஒரு லட்சத்துக்கு முப்பதாயிரத்துக்கும் மேல, தெரிஞ்சவங்க பணம் கேட்பதாகவும், அதுவும் வட்டிக்கு வெளியில் கொடுக்கும் அதே அளவிற்கான வட்டி கொடுக்கலாம் என்று கூறினார்.

ஏதோ கஷ்டத்துக்குக் கேட்கிறாங்கன்னு நானும் தனியார் வங்கியில லோன் போட்டு வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அந்தப் பணமும் திரும்பி வரவேயில்ல, வட்டி, முதல்னு ஒரு பைசாகூட இன்னும் என்கிட்ட திருப்பிக் கொடுக்கவில்லை.

ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இப்போவே எனக்கு ஒரு லட்சம் வேண்டும் என்று அடம் பிடிச்சாங்க, நான் என்ன பண்ண முடியும், தொடர்ந்து அவங்க டார்ச்சரை தாங்க முடியாத காரணத்தினால் வீட்டை விட்டு அனுப்பினேன் என்று கூறியுள்ளார்.

அவரது தம்பியிடம் கேட்ட போது, ஆம் அக்கா சொல்வது போல் பணத்தை வாங்கி அதற்கான காரணத்தை கூறவில்லை, விரைவில் இந்த பிரச்சனை தீரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.