பிக்பாஸ் போட்டியாளரின் கனவை நனவாக்கிய நடிகர்..!! எப்படி தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினேகன் சில விஷயங்களால் பிரபலமானார். அது எது என்பது உங்களுக்கே தெரியும்.

இந்நிகழ்ச்சியில் நான் வென்றால் கிடைக்கும் பரிசுத்தொகையை கொண்டு என் சொந்த ஊரில் அப்பா அம்மா பேரில் நூலகம் அமைப்பேன் என அவர் கூறியிருந்தார்.

ஆனால் இறுதி நேரத்தில் வெற்றியாளர் ஆரவ் என அறிவிப்பு வெளியானதும் அப்படியே மாறிப்போனது.

இந்நிலையில் தற்போது அந்த கனவை நிறைவேற்ற ராகவா லாரன்ஸ் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளாராம்.

இந்நிலையில் அவர் 25 அறிஞர்களை கொண்டு இதற்கான நூல்களை தேர்ந்தெடுக்க திட்டம் போட்டு இருக்கிறார். மேலும் அவர் 1 லட்சம் புத்தகங்களை இதில் நிரப்பவுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#