சாதனை படைக்க இருந்த “கரிகாலன்” நிறுத்தப்பட்டது எதனால் தெரியுமா..?


விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து செய்பவர். அப்படி இவர் எடுத்த முயற்சி தான் கரிகாலன்.

இப்படத்தை பிரபல அனிமேஷன் நிறுவனத்தை வைத்திருக்கும் எல்.ஐ.கண்ணன் தான் இயக்கவிருந்தார், இப்படத்திற்காக 45 நாட்கள் முழுவதும் க்ரீன் மேட் போட்டு எடுத்துள்ளனர்.

அத்தனை நாள் எடுத்தே 2 நிமிடக்காட்சி தான் வந்ததாம், மேலும், ஹாலிவுட்டில் வெளியான 300 போல் இப்படம் உருவாக இருந்ததாம்.

ஆனால், இரண்டு நிமிடக்காட்சிக்கே இத்தனை நாட்கள் எடுக்க, முழுப்படம் முடிய வருடக்கணக்கில் ஆகும், அப்படியே முடிந்து வெளியே வந்தாலும் தயாரிப்பாளருக்கு லாபம் தருமா? என்று தெரியவில்லை என, இப்படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#