கோயமுத்தூரைச் சேர்ந்தவர் நடிகை ஜனனி. உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா படத்தின் மூலம் திரையுலகிற்குள் வந்த இவர், அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.
அதன் பின் தொடர்ந்து படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவி சீரியலான மாப்பிள்ளை மற்றும் மெளன ராகம் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து இவர் தற்போது ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது என்று கூறலாம்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் ஜனனி, சமீபத்தி தன்னுடைய சொந்த ஊரான கோயமுத்தூருக்கு சென்றிருக்கிறார்.
அங்கு தன் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் பலரும் உங்களின் தங்கை மிகவும் அழகாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.