படப்பிடிப்பின் போது திடீரென சாமியாடிய நடிகை…!! அதிர்ச்சியில் உறைந்துபோன படக்குழுவினர்..!!


கோத்தகிரி அருகே நடைபெற்ற படப்பிடிப்பின் போது திடீரென படத்தின் நாயகி சாமியாடியதால், படக்குழுவினர் வெலவெலத்துப்போயினர். ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கும் படம் ‘பாண்டிமுனி’

பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது. அப்போது ஒரு கோயில் அருகே சில காட்சிகளை படமாக்கியபோது, நாயகி மேகாலி திடீரென சாமியாடியதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, அது குகைக்கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம்.


மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது.

அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று. கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது என தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!