ஸ்ரீரெட்டி ஆடிய நாடகம் அம்பலம்.! போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.!

தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.

சில மாதங்களா ஸ்ரீ ரெட்டி ட்விட்டரில் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே பல நடிகர், இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வருகிறார்.

தற்போது ஆந்திராவை விட்டு விட்டு சென்னையில் வசித்து வரும் இவர், ரெட்டி டைரிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரெட்டி டைரி படத்தின் பைனான்சியர் சுப்பிரமணியம் இரவு வேலையில் தன்னுடைய வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு , வீட்டில் இருந்த மேஜை, ஜன்னல் , உடைத்தார் என்றும், தன்னிடமும் தவறாக நடக்க முயற்சித்தார் என்றும் ஸ்ரீரெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால், இந்த குற்றசாட்டை சுப்பிரமணியம் மறுத்ததால், ஸ்ரீரெட்டியை விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு வர சொல்லியுள்ளனர்.

ஆனால், அவர் மாலை வரை வரவும் இல்லயாம். அதன் பின்னர் மதுரை வாயல் காவல் நிலையத்தில் ஸ்ரீரெட்டியிடம் விசாரித்த போது, தான் தாக்கப்பட்டதாக கூறியது பொய் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.