நடிகையை கொடுமைப்படுத்திய மகன்..!! அனாதையாக தனித்து விடப்பட்ட பரிதாபம்..!!


உடல் நலமில்லாத நடிகையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவர் மகன் எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் ’பகீழா’ உட்பட சில படங்களில் நடித்தவர் கீதா கபூர். மும்பையில் வசித்து வரும் இவருக்கு ராஜா என்ற மகன், பூஜா என்ற மகள் உள்ளனர். கடந்த மாதம் 21-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக, கீதா கபூரை சேர்த்தார் ராஜா.

மருத்துவமனையில் பணம் கட்ட கூறினர். ‘ஏடிஎம் போயிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிய ராஜா, பின்பு மருத்துவமனைக்கே வரவில்லை. அவருக்கு போன் செய்தால், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து மகள் பூஜாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் போன் செய்தது. ஆனால் பூஜா, ’ராங் நம்பர்’ என்று துண்டித்துவிட்டாராம்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கீதா, ‘ராஜா என்னை முதியோர் இல்லத்தில் சேரச் சொன்னார். மறுத்தேன். இதனால் தனியறையில் என்னை சிறை வைத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை சாப்பாடு கொடுத்தனர். என்னை அடித்து துன்புறுத்தினர். ஏராளமான கொடுமைகளை செய்தனர்’ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.


இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பொலிசில் புகார் செய்தது. ராஜாவை பொலிசார் தேடினர். அவர் தங்கியிருந்த வீட்டை, காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகத் தெரிய வந்தது. இப்போது கீதாவின் குடும்பத்தை தேடி வருகின்றனர்.

இதனையடுத்து இருவரும் வராததால் மருத்துவமனையில் நடிகை கீதா கபூருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கான செலவை ரூ. 1.5 லட்சம் சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கீதா தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டது பாலிவுட் நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#