200 பெண்கள், 20 ஆண்கள்! மீண்டும் அதிர்ச்சியாக்கி இருக்கும் சின்மயி, கொந்தளித்த பிரபலங்கள்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தவர் பாடகி சின்மயி. இவரது இந்த புகாரால் #metoo என்ற ஹாஸ்டேக் பிரபலமானது.

இந்த சம்பவத்திலிருந்தே சின்மயி சினிமாவை தாண்டி வெளியில் நடக்கும் விஷயங்களை பற்றியும் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படிதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கிய பொள்ளாச்சி இளம்பெண் கூட்டு பலாத்காரத்தை பற்றியும் பேசியுள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், இதுவரை பொள்ளாச்சியில் மட்டும் 200 பெண்கள் 20 ஆண்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். நாடு எங்கு செல்கிறது? இதுகுறித்து எதாவது கைது நடந்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.