குடிபோதையில் கன்னட நடிகரை தாக்கிய நடிகர் விமல்- போலீஸார் வழக்கு பதிவு

பெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்தவர் அபிஷேக். கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அபிஷேக் சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள தனியார் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் தங்கி இருந்துள்ளார்.

நேற்றிரவு அப்பார்ட்மெண்ட் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்துள்ளார். அங்கு தனது நண்பர்கள் 4 பேருடன் நடிகர் விமல் வந்துள்ளார். அங்கிருந்த அபிஷேக்கிடம் அந்த அப்பார்மெண்டில் வேலை செய்பவர் என நினைத்து விமல் அறை கேட்டுள்ளார். நானில்லை என்று கூறியதால் போதையில் இருந்த விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கன்னட நடிகர் அபிஷேக்கை அடித்து உதைத்துள்ளார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அபிஷேக் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் 294p சட்டத்தின்படி ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவில் விமல் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.