நடிகை யாசிகாவின் மரணத்தில் திடீர் திருப்பம்… கொலையா…?

துணை நடிகை யாசிகாவில் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த திரைப்படத் துணை நடிகை யாசிகா, கடந்த 12ம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யாசியாகவின் தற்கொலைக்கு அவரது காதலன் அரவிந்த் தான் காரணம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் யாசியாகாவின் தற்கொலைக்கு அவரது காதலன் அரவிந்தனுக்கு முகாந்திரம் இருந்ததாக பெரவள்ளூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் யாசிகாவிவ தாயார் எஸ்தர் பியூலா ராணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு புகாரை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகள் தற்கொலை செய்யவில்லை எனவும் அவரை அரவிந் தான் கொலை செய்துள்ளார் எனக் கூறினார். மேலும் போலீசார் கைபற்றியதாக கூறப்படும் எனது மகளின் கடிதத்தில் இருப்பது எனது மகளின் கையெழுத்து இல்லலை எனவும் கூறியுள்ளார்.

தனது மகளின் உடலை அவசர அவசரமாக, தான் வந்து சேருவதற்கு முன்பாகவே அனைத்து இறுதி சடங்குகளையும் செய்திருந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி யாசிகாவின் உடலை எரிப்பதற்கு கையெழுத்து வாங்கியதாகவும் அவர் கூறினார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.