வாய்ப்பு கொடுத்தவராலேயே துரத்தப்பட்ட ஜூலி..!! எதனால் தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி.

இதே இவருக்கு பல மடங்கு பப்ளிசிட்டியை தேடி கொடுத்தது. இதனை தொடர்ந்து இவருக்கு கலைஞர் டிவியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை கலா மாஸ்டர் மூலம் வாங்கி கொடுத்தவர் காயத்ரிதான் என கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜூலி தன் மீதான நெகடிவ் இமேஜை துடைத்து எறிவார் என்று கூறப்பட்டது.

ஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற நாளில் இருந்தே கலா மாஸ்டரை எரிச்சலூட்டும் விதமாகவே பேசி வருகிறார்.

சத்தமாக பேசி பார்வையாளர்கள் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். நிகழ்ச்சியின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அறிவுரை கூறியும் தனது போக்கை மாற்றி கொள்ளவில்லை.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கலா மாஸ்டர் நடனம் ஆடும்போது கூடவே ஆடி பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இதனால் எரிச்சலான கலா மாஸ்டர் நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டு சென்று விட்டாராம். வாய்ப்பு வாங்கி கொடுத்த கலா மாஸ்டரையே இப்படி நோகடித்து விட்டாரே என்று கலைஞர் டிவி புலம்புகிறதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#