கோடிக்கணக்கில் இழந்து விட்டேன்:மேடையில் கதறி அழுத பிரபல நடிகர்!!!


இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற அதிரடி படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ஜீவிதாவை இவர் திருமணம் செய்துகொண்டார். 1980களில் தொடங்கி மளமளவென ஏராளமான படங்களில் நடித்து வந்த ராஜசேகர், கடந்த சில வருடமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருப்பதுபோல் வருடத்துக்கு ஒரு படம் அல்லது 2 வருடத்துக்கு ஒரு படம் நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘கருடா வேகா’ தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஜசேகர் தான் சினிமாவில் இழந்தது பற்றி கண்ணீர் மல்க கூறினார். அவர் பேசியது: நான் நடித்த கருடா வேகா படத்தின் டீஸரை இணைய தளத்தில் 50 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர் என்பதை அறிந்து என் அம்மா சந்தோஷம் அடைந்தார்.


இதுதான் நான் நடித்த சினிமாவில் அதிகம்பேர் பார்த்த டீஸர். ஆனால் சில நாட்களில் என் அம்மா இறந்து விட்டார். சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு நான் கோடிகளை இழந்திருக்கிறேன். சென்னையில் நான் விற்ற எனது சொத்துக்கள் இந்நேரம் என் கையில் இருந்திருந்தால் ரூ. 200 கோடிக்கு அதிபராக இருந்திருப்பேன். தவறான படங்கள் எடுத்ததால் தோற்றேன். அதனால் இனி படங்கள் தயாரிக்க கூடாது என்று முடிவு செய்தேன். எம்பிபிஎஸ் படித்துவிட்டு நடிக்க வந்ததற்கு காரணம் சினிமா மீது எனக்கிருந்த ஈடுபாடுதான். இவ்வாறு அவர் கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார். அருகில் நின்றிருந்த அவரது மனைவி ஜீவிதா ஆறுதல் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!