தலைவர் நலமாக இருந்தால் தமிழகமும் நலமாகதான் இருக்கும்:கவிஞர் வைரமுத்து உருக்கம்!!!


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேரன் திருமணத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுவாக திருமணத்தில் மணமக்களை மட்டும் தான் வாழ்த்துவது வழக்கம். ஆனால் இந்த மண விழாவில் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞருக்கும் நாங்கள் வாழ்த்து சொல்லி இருக்கிறோம்.

வாரிசின் திருமணத்தை உடல்நிலை தேறிய கலைஞர் நடத்தி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நலமுற்று இருந்தால் தமிழகம் நலமாக இருக்கும். கலைஞர் நலிவுற்று இருந்தால் தமிழகம் நலிவுற்று இருக்கும்.


அவரது உடல்நிலை மெல்ல மெல்ல தேறி நலம் பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அவர் நலமாக இருந்தால் தமிழகம் நலமாக இருக்கும்.

மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த கலைஞருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!