என் மகளுக்கு இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா, கோபத்துடன் பேசிய ரஜினி

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த அவர்கள் மட்டும் தான். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். அண்மையில் தான் இப்படத்தின் டைட்டுளை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரஜினியுடன் படையப்பா படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்த நடிகை அனிதா வெங்கட் அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இதில் பேசிய இவர் “நான் படையப்பா படப்பிடிப்பில் இருக்கும் போழுது ஒரு நாள் நானும் என் அம்மாவும் நாற்காலி இல்லாமல் அமர்ந்து இருதோம். அதை பார்த்த ரஜினி என்ன கூப்பிட்டு, ஏன் இங்கு உங்காந்து இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் நாற்காலி எதுவும் இல்லை. production கிட்ட கேட்டோம் அவங்க கொஞ்சோம் லேட்டா ஆகும் என சொன்னார்கள்” என்று கூறினேன்.

மேலும் பேசிய இவர் அதற்கு “ரஜினி அவர்கள் உடனடியாக ஒரு மைக்கை கையில் எடுத்து யார் அந்த production என்று கூப்பிட்டு. என் படத்தில் நடிக்கும் ஒரு நடிகைக்கு நீங்கள் தரும் மரியாதை இதுதானா. இப்படத்தில் எனக்கு மகளாக நடிக்கும் நடிகைக்கு இது தான் மரியாதையா என்று கேட்டு. அவர்களுக்கு இப்போ நாற்காலி வர வேண்டும்” என கூறினார் என்று வெளிப்படையாக பேசினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!