பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா மீது காட்டப்பட்ட பாசம் பொய்யா? மேடையில் உருகிய சேரன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா மீது காட்ட பட்ட பாசம் குறித்து சேரன் உருக்கமாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா மீது காட்டப்பட்ட பாசம் பொய்யா? மேடையில் உருகிய சேரன…
சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. சாய் ராஜ் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ளது.

இதில் சேரனுடன் இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இதில் சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, வினோத் எஜமான்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய சேரன், ‘நாம எப்போ அப்பாவா உணர்கின்ற தருணம் மிகவும் முக்கியமானது. என் வாழ்க்கையில் நான் பல தருணங்களில் அதை உணர்த்தியிருக்கிறது. என் மகளை முதல் முதலாக கையில் ஏந்திய போது என்னிடம் பணமில்லை. என் மனைவியின் பிரசவ செலவிற்கு நண்பனிடம் பணம் வாங்கி வந்து தான் கட்டினேன்.

ஆதலால் அப்பாவாக உணர்கின்ற தருணம் மிகவும் அழகானது. எனக்கு அப்பா என்கின்ற உணர்வை ஆண்டவன் அடிக்கடி நியாபகப்படுத்திக்கிட்டே இருக்கிறான். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதனை உண்மையாக, நேர்மையாக என் மகளை பார்ப்பது போல பார்த்துக்கொண்டேன். எந்த பாசாங்கும் போலியும் நான் கட்டியா பாசத்தில் இல்லை. அது கேமிற்காகவும் இல்லை . அந்த பாசத்தைப் பொய்யாகக் காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன்’ என்று பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!